பொதக்குடியில் இருந்தாலும் பிசினஸ்

பண்ணலாமா...........

Tuesday, March 16, 2010

மணலில் மலர்கிறது மின்சாரம்

அமெரிக்காவை அசத்துகிறார் இந்தியாவில் பிறந்த ஒரு விஞ்ஞானி
சராசரி இந்தியர்களை போல உயரமான மெலிந்த கருத்த உருவம்.பளிரென்று கண்கள், சத்ரிய கூர்மையான மூக்கு .விஞ்ஞானி டாக்டர்.கே.ஆர்.ஸ்ரீதர் பேசத்துவங்குகிறார் மேடையின் ஒரு புறத்தில் எதோ ஒன்றை துணியால் மூடி வைத்திருகிறார்கள்.தேர்தெடுத்து வார்த்தைகளில், தெளிவான உச்சரிப்பில் அந்த பெரிய மேடையில் நடந்த வண்ணம் பேசுகிறார்.
நீங்கள் தயாரிக்கும் மின்சாரத்தில் அப்படி என்ன ஒரு மந்திர சக்தி இருக்கிறது என்று எல்லோரும் கேட்கிறார்கள்.இதுதான் அந்த மந்திர சக்தி ! என்று சொல்லியபடி மூடி இருக்கும் துணியை விலகுகிறார்.ஒரு கண்ணாடி பெட்டகம் ,அதற்குள்ளே மணல்.சாதாரனமாக கடற்கரையில் நாம் பார்க்கும் மணல்!
"உலகின் எந்த கண்டத்திலும் ,கடற்கரைகளில் எளிதாக கிடைக்கும் இந்த மணல்தான் எங்கள் தயாரிப்பின் அடிப்படை.இதில் ஜிர்காநியம் ஆக்சைட் இருக்கிறது .இதில் இருக்கும் ஒரு வேதிய பொருள் பிரித்து இந்த ஃப்யுல் செல்லை தயாரிதிருகிரோம் என்று சொல்லும் ஸ்ரீதர் , "இதை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை .இது 1980ல் ஆர்தர் நான்சைட் என்பவற்றின் கண்டுபிடிப்பு . நாங்கள் அதை நீண்ட ஆறைசிகளுக்கு பின், பிரச்சனைகளை களைந்து ,சிறப்பான தொழில் நுட்பத்துடன் ,அதிக செலவில்லாத எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக்கொண்டு ,இந்த தயாரிபிர்கான மூலபோருல்லை உருவாக்கி ,இந்த
ஃப்யுல் செல்களை வடிவமைதிருகிறோம்.இதை புளூம் எனெர்ஜி செல் என்று அறிமுகபடுத்த விரும்புகிறேன் .என்று சொல்லிய வண்ணம் , அந்த கண்ணாடி பெட்டகத்திற்குள் கையைவிட்டு துழாவி இரு சதுர மஞ்சள் வண்ண அட்டைகளை எடுத்துகாட்டுகிறார்.இதுதான் அந்த அந்த மந்திர சக்தி மணல் சதுர தட்டை வடிவத்தில் மணல்!

"இம்மாதிரியான ஃப்யுல் செல்கள் முன்னரும் தயாரிக்கபடுகிறது .ஆனால், அதற்கு பிளாட்டினம் போன்ற விலையுயரிந்த எளிதில் கிடைக்காத போர்ட்கள் பயன்படுத்தப்பட்டன. அதிக செலவில்லாமல் மணலில் இருந்து எடுத்த வேதியதை மாவாக்கி இம்மாதிரி ஃப்யுல் செல்லாக உருவாகும் முறையை நாங்கள் கண்டுபிடுதிருகிரோம் .பௌடேரிலிருந்து பவர் என்பது எங்களது தொழில்நுட்பம். இந்த செல் 25 வாட் மின்சாரம் தருகிறது . ஆராய்ச்சியை துவங்கிய காலத்தில் இதில் கிடைத்தது 5 வாட் . இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொருத்து இருந்து பாருங்கள்.இந்த மாதிரி
ஃப்யுல் செல்களை இனைத்து தயாரித்த இந்த அமைபிளிருது கிடைக்கும் மின்சாரம் ஒரு சாதாரண அமெரிக்க வீட்டிக்கு 24 x 7 ல் 365 நாட்களுக்கும் போதுமானது " என்று சொல்லிய வண்ணம் ஒரு கையால் தரையிலிருந்து தூக்கி ஒரு செங்கல்லின் வடிவத்திலுள்ள கருப்பு கட்டையை காட்டுகிறார். " இதைபோல பல கட்டிகளை இன்னைத்து உங்கள் குளிர்சாதனப்பெட்டி வடிவில் அமைத்தால், அது ஒரு பெரிய கடையின் மின்சாரதேவைக்கு போதும். அதைவிட பெரிய வடிவில் அமைகப்படவைகல்லை இன்னைத்து ஒரு கார் நிறுத்த கூடிய இடத்தில நிறுவினால், அது ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு வீண்டிய மின்சாரத்தை தரும். செலவு மிக குறைவு. இன்று ஒரு கி. வாட். 40 சென்ட் (அமெரிக்க நாணயத்தில் 40 பைசா).தேவையும் உற்பத்தியும் அதிகரிக்க அதிகரிக்க விலை குறையும் .இதை நாங்கள் "புளூம் சர்வர்" என அழைக்க விரும்புகிறோம் ஒரு நிறுவனத்தில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் அதிகமாக அதிகமாக எப்படி சர்வர்கள் அதிகமாகிறதோ அதுபோல் உங்கள் தேவைக்கு ஏற்ப புளூம் சர்வர்களை அதிகபடுத்தி எவ்வளவு வேண்டுமானாலும் மின்சாரம் பெற்றுகொள்ளலாம்" என்றார் ஸ்ரீதர்.
இந்த அறிமுக விழாவில் கலந்துகொண்ட கலிபோர்னியா மாநில கவர்னர் ஆர்னால்ட் ஷுவர்ஸ்கர் (ஹாலிவுட் நடிகர்) ஸ்ரீதரை கட்டி அனைத்து "இந்த மனிதரை நேசிக்கிறேன். இவரது கண்டுபிடிப்பால் இன்று கலிபோர்னியா மாநிலமும்,நாளையே அமெரிக்காவும், தொடர்து உலகமும் புதிய மின்சக்தி பெறப்போகிறது"என்று சொன்னதை டி. வி. இல் உலகம் பார்த்தது.
ஸ்ரீதர், சென்னை பல்கலைகழகத்தில் மெக்கானிகல் என்ஜினியர் பட்டம் பெற்றார். பின் இல்லினாயிஸ் பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அவர், அமெரிக்க வின்வெலி நிறுவனமான நாசாவின் ஆலோசராக பணியாற்றினார். அங்கு செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களை ஆக்சிஜெனாக மாற்றுவது என்பதை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார் அந்த வேலையை விடுவிடு புளூம் எனெர்ஜி என்ற இந்த நிறுவனத்தை துவங்கி இருபதற்கு காரணம் "இது உலகில் மக்களுக்கு உதவதோடு ,பல மாற்றங்களையும் நிகழ்த்தும்" என அவர் ம்புவதுதான். ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்த விஷயம், பள்ளிகுழந்தைகளோடு உரையாடுவது (அமெரிக்கவில் கிண்டர்கார்டன் இருந்து 12 ம் வகுப்புவரை உள்ள குழந்தைகள் "k12குழந்தைகள் " என்றுகுறிப்பிடுவார்கள். அந்தகுழந்தைகளிடம் ,கணிதம் , அறிவியல், பாடகளில் ஆர்வம் எற்படுதும் பணிதான் ஸ்ரீதரின் பொழுதுபோக்கு ).அவருக்கு இரண்டு குழந்தைகள். கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கிறார் .
உலகின் பெருகிவரும் மின் தேவையை பூர்த்தி செய்ய மற்றுமொரு மின்சக்தி பிறந்து இருபது மகிழ்ச்சி தரும் செய்தி .அதைவிட மகிழ்ச்சி தருவது ,அதை கண்டு பிடித்தவர் ஒரு இந்தியர்.அதுவும் சென்னையில் படித்த இந்தியர்!

No comments:

Post a Comment